கடந்த 2008 ஆம் ஆண்டு, மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக, டேவிட் ஹெட்லி அறிவிக்கப்பட்டார். இவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, 25 ஆண்டுகள் சிறைவாசத்தில் உள்ளார். இவரது நண்பரான பாகிஸ்தானை சேர்ந்த தஹ்வூர் ராணா, மும்பை தாக்குதல் திட்டத்திற்கு மிகவும் உதவியவராக சொல்லப்பட்டுள்ளார். கனடாவில் வசித்து வந்த அவர், கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில், தஹ்வூர் ராணா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரி அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கில், லாஸ் ஏஞ்சல்ஸ் மத்திய மாவட்ட நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன், நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக நிரூபணம் ஆன ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.