கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து எலிக்காய்ச்சல், டெங்கு, நிஃபா என பல்வேறு வைரஸ்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நிஃபா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர். கடுமையான பாதுகாப்பு மூலம் நிபா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.தற்போது திருவனந்தபுரம் வட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த இருவருக்கு புரூ செல்லோசிஸ் நோய் பாதித்துள்ளது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என தெரிவித்துள்ளனர். இந்த நோய்க்கு தனி அறிகுறிகள் எதுவும் தென்படாது. கர்ப்ப சிதைவு மட்டுமே இந்த நோய்க்கான அறிகுறி ஆகும். மேலும் இந்த நோய்கள் கால்நடைகள் மூலம் மனிதருக்கு பரவும் என்பதால் மக்கள் பாலை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.