நர்மதா பள்ளத்தாக்கில் அரிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

January 23, 2023

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள நர்மதா நதி பள்ளத்தாக்கில், டைனோசர்களின் கூடுகள் மற்றும் சுமார் 256 டைனோசர் முட்டைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்திய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பாக், குக்சி போன்ற பகுதிகளில் டைனோசர் எச்சங்களை கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. "சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, இந்த பகுதியில் நீண்ட கழுத்துக்களை உடைய சோறோபாட் (Sauropod) என்ற டைனோசர் வகை வாழ்ந்திருக்கலாம். இவை சைவ வகையை சார்ந்ததாகும். […]

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள நர்மதா நதி பள்ளத்தாக்கில், டைனோசர்களின் கூடுகள் மற்றும் சுமார் 256 டைனோசர் முட்டைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்திய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பாக், குக்சி போன்ற பகுதிகளில் டைனோசர் எச்சங்களை கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

"சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, இந்த பகுதியில் நீண்ட கழுத்துக்களை உடைய சோறோபாட் (Sauropod) என்ற டைனோசர் வகை வாழ்ந்திருக்கலாம். இவை சைவ வகையை சார்ந்ததாகும். இந்திய நிலத்தட்டில் இருந்து, சீஷல்ஸ் பிரிந்த காலத்தில், சுமார் 400 கிலோமீட்டருக்கு கடல் நீர் நர்மதா பள்ளத்தாக்கிற்குள் நுழைந்துள்ளது. அப்படியான பகுதி ஒன்றில், டைனோசர் எச்சங்கள் கிடைத்துள்ளது. பொதுவாக, டைனோசர்களின் கூடுகள் சற்று தொலைவாக அமைந்திருக்கும். ஆனால், இங்கு கிடைத்தவை ஒன்றுடன் மற்றொன்று அருகருகே அமைந்துள்ளது. மேலும், ஒவ்வொரு கூட்டில் இருந்தும் சுமார் 20 முட்டைகள் கிடைத்துள்ளன. அத்துடன், தாய் டைனோசருக்கு முட்டையிடுவதற்கான சாதகமான சுற்றுச்சூழல் அமையாததால், பல்வேறு அடுக்குகளைக் கொண்ட முட்டைகளை ஈன்றுள்ளது. இங்கு கிடைத்துள்ள முட்டைகள் 15 முதல் 17 சென்டிமீட்டர் வரை விட்டம் கொண்டுள்ளன" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu