சென்னை விமான நிலையத்தில் அரிய வகை குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது அங்கு ஒருவரின் உடமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் அதை திறந்து பாா்த்ததில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவை தென் அமெரிக்காவை சேர்ந்த பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகளில் வசிக்கும் 'மார்மோ செட்டு' என்ற அரிய வகை 4 குரங்கு குட்டிகள் என்பது தெரியவந்தது.
மேலும் மற்ற நாட்டில் இருந்து வனவிலங்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறை மற்றும் இந்திய வனவிலங்கு துறையின் தடையில்லா சான்றிதழும் அவரிடம் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.