டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா, வளர்ப்பு பிராணிகளுக்கான சிறப்பு திட்டத்தை தொடங்கியுள்ளார். கடந்த ஜூலை 1ம் தேதி, மும்பையில் டாடா அறக்கட்டளையின் கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஸ்மால் அனிமல் ஹாஸ்பிடல் என்ற பெயரில் மும்பை நகரில் டாடா அறக்கட்டளையின் கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. +912231053105 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அப்பாயிண்ட்மெண்ட் மற்றும் அவசர சேவைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடா மேற்கொண்டுள்ள இந்த சேவை நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.