பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர், பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு காலமானார். இவர் டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணியாற்றி 2013 இல் ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் மகாராஷ்டிரா அரசு அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.