தொழிலதிபர் ரத்தன் டாடா, பிரபல சொத்து மேலாண்மை நிறுவனமான அப்ஸ்டாக்ஸ்-ல் இருந்த தனது 5% பங்குகளை சமீபத்தில் விற்றுள்ளார். இந்த விற்பனையின் மூலம் அவர் 23,000% அளவில் அபாரமான லாபத்தை ஈட்டியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தில் 1.33% பங்கை வாங்கிய ரத்தன் டாடா அப்போது $200,000 மட்டுமே முதலீடு செய்திருந்தார். ஆனால், தற்போது Upstox நிறுவனத்தின் மதிப்பு $3.5 பில்லியனாக உயர்ந்துள்ளதால், ரத்தன் டாடாவின் முதலீடு $46.55 மில்லியனாக உயர்ந்துள்ளது.
Upstox நிறுவனத்தின் இணை நிறுவனர் கவிதா சுப்ரமணியன், ரத்தன் டாடா அவர்களின் இந்த முதலீட்டை பாராட்டி உள்ளார். அனைத்து இந்தியர்களுக்கும் உயர்தர சொத்து மேலாண்மை சேவைகளை வழங்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க ரத்தன் டாடா அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே தனது நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.