தொழில் உலகின் சூரியனாகத் திகழ்ந்த ரத்தன் டாடா, அக்டோபர் 9, 2024 அன்று நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார். டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக, அவர் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளார். குறிப்பாக, புதுமையான முயற்சிகளுக்கு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம், இந்தியாவின் ஆராய்ச்சித் துறையை உயர்த்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இவர் தலைமையிலான டாடா டிரஸ்ட், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) அல்சைமர் நோய்க்கான ஆராய்ச்சிக்கு ரூ. 75 கோடி நிதியை வழங்கியது. மேலும், ஐஐடி பாம்பேயில் டாடா மையம் மற்றும் அமெரிக்காவின் சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் டாடா மரபணு நிறுவனம் ஆகியவற்றை நிறுவி, அறிவியல் ஆராய்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தார். குறிப்பாக, நீர் சுத்திகரிப்பு ஆராய்ச்சியை ஆதரிப்பதன் மூலம் நிலைத்தன்மைக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.