ரேசன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு மூலம் பொருள் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

April 27, 2022

27 Apr 2022 சட்டப்பேரவையில் நேற்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ரேஷன் கடைகளில் குடும்பத் தலைவரின் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்குவதில் பொதுமக்களுக்கு சிரமம் இருப்பதாக கூறினார்.

27 Apr 2022 சட்டப்பேரவையில் நேற்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ரேஷன் கடைகளில் குடும்பத் தலைவரின் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்குவதில் பொதுமக்களுக்கு சிரமம் இருப்பதாக கூறினார்.இதற்கு பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ரேஷன் கடைகளில் விரல் ரேகைபதிவு செய்ய முடியாத இனங்களில் கண் கருவிழி மூலம் சரிபார்த்து பொருட்கள் வழங்கும் நடைமுறை அனைத்து பகுதிகளிலும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என பேரவையில் தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு அக்.1-ம் தேதி முதல் இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் விரல் ரேகை சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

அதன்படி, குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர் எவரும் அவரது விரல் ரேகைசரிபார்ப்புக்குப் பிறகு பொருட்களைப் பெற்று கொள்ளலாம்.மேலும்,கடைகளுக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் உடல் நலம் குன்றி உயிர்காக்கும் மருத்துவ சிசிச்சை பெறுபவர்கள், போன்ற பயனாளிகள், அவர்கள் அங்கீகரிக்கும் பிரதிநிதிகளுக்கு பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ரேஷன்கடைகளில் உள்ள படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து தர வேண்டும். அதற்கு வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் ஆகியோர் உரிய அனுமதியை உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் வயோதிகம் உள்ளிட்ட இதர காரணங்களால் விரல் ரேகை பதிவு செய்ய முடியாத இனங்களில் கண் கருவிழி மூலம் சரிபார்த்து பொருட்கள் வழங்கும் நடைமுறை மகாராஷ்டிரா, அசாம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பாட்டில் இருந்து வருகிறது.பின்னர் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக அறிந்தும், பயனாளிகளின் கருத்துகளைக் கேட்டும் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu