ரேமண்ட் நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் இருந்து தனியாக பிரிவதாக அறிவித்தது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக இன்றைய வர்த்தக நாளில் ரேமண்ட் நிறுவனத்தின் பங்குகள் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளன.
ரேமண்ட் நிறுவனம் ரேமண்ட் ரியாலிட்டி லிமிடெட் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், ரேமண்ட் குழுமத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள், ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை தனியாக பிரிப்பதாக அறிவித்தனர். இந்த நிலையில், இன்று 10% அளவுக்கு உயர்ந்த ரேமண்ட் பங்குகள் கிட்டத்தட்ட 3240 ரூபாய் அளவில் வர்த்தகம் ஆகின. இது ரேமண்ட் வரலாற்றில் அதிகபட்ச பங்கு மதிப்பாகும். ரியல் எஸ்டேட் நிறுவனம் தனியாக பிரிவதால், ரேமண்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள் 1:1 ரேஷியோவில் பங்கு பங்களிப்பு பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.