மத்திய ரிசர்வ் வங்கி தனது நிர்வாக இயக்குனராக பி வாசுதேவன் அவர்களை நியமித்துள்ளது. இவர் வங்கியின் மூன்று பிரிவுகளுக்கு தலைமை தாங்குவார் என கூறப்பட்டுள்ளது. ஜூலை மூன்றாம் தேதி முதல் இவரது பதவிக்காலம் தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
பி வாசுதேவன், கடந்த 30 ஆண்டுகளாக மத்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வருகிறார். அவர் வங்கி சார்ந்த மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கண்காணிப்பிலும், கட்டண பிரிவுகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். அத்துடன், நிதி துறை சார்ந்த பல்வேறு சான்றிதழ் படிப்புகளையும், பட்ட மேற்படிப்புகளையும் அவர் நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, அவரது நியமனம் மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.