ரேஸர்பே, கேஷ்ப்ரீக்கு ரிசர்வ் வங்கி தடை

December 17, 2022

ரேஸர்பே, கேஷ்ப்ரீ நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது. கட்டணம் செலுத்தும் சேவை வழங்கும் நிறுவனங்களான ரேஸர்பே, கேஷ்ப்ரீ போன்றவை புது வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து ரேஸர்பே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஜூலையில் உரிமம் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. தற்போது உரிமம் வழங்குவதற்கான இறுதி கட்ட பரிசீலனை நடந்து வருகிறது. இந்நிலையில் அது தொடர்பாக சில விவரங்களை ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது. […]

ரேஸர்பே, கேஷ்ப்ரீ நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது.

கட்டணம் செலுத்தும் சேவை வழங்கும் நிறுவனங்களான ரேஸர்பே, கேஷ்ப்ரீ போன்றவை புது வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து ரேஸர்பே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஜூலையில் உரிமம் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. தற்போது உரிமம் வழங்குவதற்கான இறுதி கட்ட பரிசீலனை நடந்து வருகிறது.

இந்நிலையில் அது தொடர்பாக சில விவரங்களை ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது. அதுவரை வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்துள்ளது. எனினும் ரேஸர்பேயின் இதர சேவைகள் தொடர்ந்து நடந்து வருகிறது என கூறப்பட்டுள்ளது. கேஷ்ப்ரீ நிறுவனம் சார்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu