சிறந்த வங்கியாளராக சக்தி காந்த தாஸ் இரண்டாவது முறையாக தேர்வு
அமெரிக்காவின் குளோபல் பைனான்ஸ் இதழ், ஆண்டுதோறும் சிறந்த மத்திய வங்கி கவர்னர்களை அங்கீகரிக்கின்றது. இந்த ஆண்டுக்கான சிறந்த வங்கியாளராக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தேர்வாகி, சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டில் ஏ பிளஸ் கிரேடு பெற்றுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டிலும் இவர் இவ்விருதுக்கு அங்கீகரிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கி, தாஸ் இவ்வாண்டு மீண்டும் ஏ பிளஸ் கிரேடு பெற்றது குறித்து தங்கள் சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.