மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாசுக்கு, இந்த ஆண்டின் சிறந்த ஆளுநர் விருது லண்டனில் வழங்கப்பட்டுள்ளது. லண்டன் மத்திய வங்கி இந்த விருதை வழங்கி அவரை கௌரவித்துள்ளது.
சக்தி காந்த தாஸ், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் மத்திய வங்கி ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தார். எனவே, பெருந்தொற்று காலத்தை மிகச் சிறப்பாக கையாண்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “பொருளாதார அடிப்படையில் மிகப்பெரிய பேரிடரில் இருந்து நாட்டை பாதுகாத்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. குறிப்பாக, உலகளாவிய முறையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலை, உக்ரைன் ரஷ்யா போர், உயர்ந்து வரும் பண வீக்கத்தின் பாதிப்பு ஆகியவற்றை அவர் சிறப்பாக கையாண்டுள்ளார்.” - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் நாணய கொள்கையில் உறுதியான முடிவுகளை அவர் எடுத்தார் என கூறப்பட்டுள்ளது.