மத்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளை முறையாகப் பின்பற்றாததால், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியான மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிக்கையில் இது தொடர்பான விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி மீது 1.3 கோடி அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அளவிலும், இந்தியன் வங்கிக்கு 1.62 கோடி அளவிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் நடத்தப்படும் தேசிய வங்கிகள் மீது அதிக தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இந்திய அளவில் பேசு பொருளாக உள்ளது. அபராதம் விதிக்கப்பட்டாலும், வங்கியின் செயல்பாடுகளில் எந்த தொய்வும் இருக்காது என மத்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், வங்கிகள் விதிமுறைகளை பின்பற்றாதது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கு வங்கிகள் அளித்த பதில்களை பரிசீலனை செய்த பின்னரே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், விளக்கம் அளித்துள்ளது.