பிரபல தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் இந்த அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் வங்கிச் செயல்பாடுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என விளக்கம் அளித்துள்ளது.ஐசிஐசிஐ வங்கிக்கு 12.19 கோடி ரூபாய் அபராதமும், கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு 3.95 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கல் துறையில் மத்திய ரிசர்வ் வங்கி வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் ஐசிஐசிஐ மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.