மத்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு முறைகளை பின்பற்றாததாக குற்றம் சாட்டப்பட்டு, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு 84.5 லட்சம் ரூபாயை மத்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சமர்ப்பித்த அறிக்கைகளை ஆய்வு செய்த பின்னர், வங்கி மோசடியான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், அதற்கு வாய் வழி பதில்கள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளை பின்பற்றாததால் மட்டுமே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவுகளில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும், தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கிப் பரிவர்த்தனைகளில் எந்தவித இடையூறும் இருக்காது என கூறப்பட்டுள்ளது.