மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தின் இறுதியில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி தொடரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2023 பிப்ரவரி முதல் ரெப்போ வட்டி விகிதம் 6.5% அளவில் தொடர்கிறது. மேலும், 9 வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 18 மாதங்களாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பதால், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி மாற்றமின்றி நீடிக்கிறது. வட்டி உயரவில்லை என்றாலும், தொடர்ச்சியாக ஒரே நிலையில் நீடிப்பது கூட நடுத்தர மக்களுக்கு ஒரு வகையான சுமை தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் உணவு பணவீக்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளதே ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாததற்கான முக்கிய காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பணவீக்கம் 4.5% மற்றும் ஜிடிபி 7.2% இருக்கும் என்று கணித்துள்ளது.