விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக, 8 கூட்டுறவு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த, தி விசாகப்பட்டினம் கூட்டுறவு வங்கி, தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் ஊழியர்கள் கூட்டுறவு வங்கி, கேரளா பாலக்காட்டில் உள்ள ஒட்டப்பாலம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி, தெலுங்கானாவின் தருசலாம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி, ஆந்திர பிரதேசம் நெல்லூரில் உள்ள நெல்லூர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி, காக்கிநாடாவில் உள்ள காக்கிநாடா நகர கூட்டுறவு வங்கி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கேந்திரபாரா நகர கூட்டுறவு வங்கி, பிரதாப்கர் பகுதியில் உள்ள தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி ஆகிய எட்டு கூட்டுறவு வங்கிகளுக்கு, விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக, நிதி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, கணக்கில் காட்டப்படாத வருவாய், முறையாகச் சொத்து மதிப்பு கணக்கீடு செய்யாதல் போன்ற காரணங்களுக்காக விசாகப்பட்டினம் கூட்டுறவு வங்கிக்கு 55 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, விதிமுறைகளை மீறியதால், நெல்லூர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் ஊழியர்கள் கூட்டுறவு வங்கி, தருசலாம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி, காக்கிநாடா கூட்டுறவு நகர வங்கி ஆகியவற்றுக்கு தலா 10 லட்ச ரூபாய் அபராதமும், கேரளாவின் ஒட்டப்பாலம் கூட்டுறவு வங்கி மற்றும் உத்தரப்பிரதேசம் பிரதாப்கர் பகுதியில் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு தலா 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேந்திரபாரா நகர கூட்டுறவு வங்கிக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தரப்பு விளக்கமளித்துள்ளது.