மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு சந்திப்பில், ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி தொடரப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த இரு தினங்களாக மும்பையில் நடைபெற்று வந்த நிதி கொள்கை குழு சந்திப்பின் இறுதியில், ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 4வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5% அளவில் இருக்கும் என்று கணிப்பதாக கூறியுள்ளார்.