மத்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, வங்கியின் மொத்த பண மதிப்பு 11.08% உயர்ந்து, 70.48 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 844.76 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஜிடிபி யை விட 2.5% உயர்வாகும். சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின் படி பாகிஸ்தானின் ஜிடிபி 338.28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், மத்திய ரிசர்வ் வங்கியின் பண மதிப்பு 63.44 லட்சம் கோடியாக பதிவானது. இது இந்தியாவின் ஜிடிபி மதிப்பை விட 24.1% கூடுதலாகும். வங்கியின் வருவாய் கடந்த நிதி ஆண்டில் 17.04% உயர்வை சந்தித்துள்ளது. மேலும், செலவினங்கள் 56.3% வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.