இருநாட்டு ராணுவம் இடையே மீண்டும் தகவல் தொடர்பு - அமெரிக்கா சீனா ஒப்புதல்

November 17, 2023

நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரது சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின்போது, இருநாட்டு ராணுவம் இடையே மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் வழங்கி உள்ளனர். இது தவிர, போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட உறுதி பூண்டுள்ளன. ஓராண்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் மற்றும் சீன அதிபர் ஆகியோரது சந்திப்பு நிகழ்ந்தது. இதன் போது, பல்வேறு சர்வதேச பிரச்சனைகள் குறித்து […]

நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரது சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின்போது, இருநாட்டு ராணுவம் இடையே மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் வழங்கி உள்ளனர். இது தவிர, போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட உறுதி பூண்டுள்ளன. ஓராண்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் மற்றும் சீன அதிபர் ஆகியோரது சந்திப்பு நிகழ்ந்தது. இதன் போது, பல்வேறு சர்வதேச பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து சீன அதிபர் கவலை தெரிவித்ததாக சீன ஊடகம் தெரிவித்தது. அதே வேளையில், செய்தியாளர்களை சந்தித்த ஜோ பிடன், சீன அதிபர் சர்வாதிகாரியாக இருப்பதாக கூறினார். இது சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu