தமிழகத்தில் குடும்ப தலைவிரகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்க படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் தேர்வானவர்களுக்கு குறுஞ்செய்தியின் மூலமாக விண்ணப்பம் பெறப்பட்டதாக செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. பின் கள ஆய்வுகள் மேற்கொண்டு 6,50,000 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதமுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தனர்.
அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட காரணம் என்ன என்பது குறித்த தகவல்களை குறுஞ்செய்தி மூலமாக மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தி பெற்ற 30 நாட்களுக்கு இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம். தவிர விண்ணப்பதாரர்கள் அவர்களின் விவரம் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மையத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பற்றி தகவல்களை அறிந்து கொள்ளலாம் பின்னர் தான் தகுதியானவர் என அறியும் பட்சத்தில் இ சேவை மையம் மூலமாகவும் அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் மூலமாகவும் மேல்முறையீடு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளனர்.