முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் அன்றாட அரசு துறைகளை அணுகும் மக்களுக்கு வழங்கும் சேவைகளை செம்மைப்படுத்தி விரைவாக அரசின் சேவைகள் மக்களை சென்று சேரும் விதமாக மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதற்கட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி கோவையில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 2058 முகாம்கள் நடத்தி எட்டு லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது . இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஊரகப்பகுதிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. அதன்படி நேற்று தர்மபுரி மாவட்டம் சென்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இத்திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2500 முகாம்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.