அருணாச்சலில் எட்டு வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தேர்தல் செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் சில இடங்களில் வன்முறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தல் செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அந்த எட்டு வாக்குச்சாவடிகளுக்கும் 24ம் தேதி காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மறு வாக்கு பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி ஜூன் இரண்டாம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.