எல்லைப் பகுதியில் இந்தியாவுடன் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயார் என்று சீனா அறிவித்துள்ளது.
சீனா - இந்தியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் இருநாட்டு ராணுவமும் மோதிக்கொண்டது. இந்த பதற்றத்தை தீர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு சீன வெளியுறவு மந்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, இந்தியாவும் சீனாவும் உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட வளரும் நாடுகள் ஆகும். இரண்டுமே வளர்ந்து வரும் பொருளாதாரங்களை கொண்டுள்ளது. எல்லை விவகாரத்தில் இருநாட்டு தலைவர்களும் எட்டியுள்ள ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்தவும் எல்லை பகுதிகளில் உள்ள சூழல்கள் தொடர்பான பிரச்சனைகளை முறையாக கையாளவும், அமைதியை பாதுகாக்கவும் அஜித் தோவலுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.