டெல்லியில் இன்று மற்றும் நாளை ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள பல்வேறு உலக தலைவர்கள் டெல்லியில் வந்தவண்ணம் உள்ளனர்.
புதுடெல்லியில் கோலாகலமாக இன்று ஜி 20 மாநாடு பிரகதி மைதானத்தில் கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இங்கு பிரதமர் மோடி அங்கு காலை 9:00 மணி அளவில் சென்றார். பின்னர் அங்கு மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின் உலக தலைவர்கள் அனைவரையும் பிரதமர் மோடி சிவப்பு கம்பளத்தில் நின்று வரவேற்க தயாராகி உள்ளார். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலக சுகாதார அமைப்பு தலைவர், சீன பிரதமர், பிரேசில் பிரதமர் ஆகியவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார்.
இதில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.