காவிரி நீர் ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு கர்நாடக அரசு வினாடிக்கு 2600 கன அடி நீர் திறந்து விட பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய நீரை கர்நாடகா அரசு திறந்து விட தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடி வருகிறது. மேலும் இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வீணாகி விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 2600 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை நீர் திறக்குமாறு பரிந்துரை செய்துள்ளது.