கேரளாவில் இடுக்கி, மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அதன்படி, இடுக்கி மாவட்டம் மூணாறில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை காரணமாக இடுக்கி, மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம்,கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடில் உள்ளிட்ட இடங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.