நீட் தேர்வில் பூஜ்ய(0) மதிப்பெண்கள் எடுத்தாலும் முதுகலை பட்டப்படிப்பில் சேர முடியும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதி தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி நாடு முழுவதும் பிளஸ் டூ மாணவர்கள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் மருத்துவ கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் தங்களது விருப்பங்களை திருத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முதுநிலை கலந்தாய்வுக்கான மூன்றாவது சுற்றுக்கான அட்டவணையும் விரைவில் மருத்துவ கல்லூரி குழு வலைதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.