ரயில் பயண சீட்டு முன்பதிவு காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரெயில்வே, பயண சீட்டுகளை முன்பதிவு செய்யும் காலத்தை 120 நாட்களிலிருந்து 60 நாட்களுக்கு குறைத்துள்ளது. இது, பயணிகள் அடுத்த பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்ய மேலும் வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயில்களுக்கு முன்பதிவு காலத்தில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை, நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.