அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் குறைப்பு

October 18, 2023

அடுக்குமாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைவதாக தெரிவித்து வந்தனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் நான்கு மாவட்ட கலெக்டர்கள் கள ஆய்வுக் கூட்டத்தில் தென்சென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலையில் உள்ள பெருங்குடி கட்டண சாவடியில் கட்டணம் வசூல் செய்வதை கைவிட்டுள்ளது. அதேபோல சென்னை உள்ளிட்ட பிற மாநகராட்சிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைப்பதால் பொதுமக்கள் […]

அடுக்குமாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைவதாக தெரிவித்து வந்தனர்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் நான்கு மாவட்ட கலெக்டர்கள் கள ஆய்வுக் கூட்டத்தில் தென்சென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலையில் உள்ள பெருங்குடி கட்டண சாவடியில் கட்டணம் வசூல் செய்வதை கைவிட்டுள்ளது. அதேபோல சென்னை உள்ளிட்ட பிற மாநகராட்சிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைப்பதால் பொதுமக்கள் ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கக்கூடிய நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளதாக குடியிருப்பு சங்கங்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இதனை பரிசீலித்து 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாக உள்ள மூன்று அடுக்கு உள்ள அல்லது அதற்கும் குறைவாக உள்ள மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டிற்கான புதிய கட்டண சலுகை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.மேலும் இதன்பின் பொது பயன்பாட்டில் செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறையும் எனவும் இதனால் மாநிலம் முழுவதும் சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu