தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் 12 மணி நேரமாக குறைக்கப்பட்டது.
தமிழகத்தில் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்பு 18 மணி நேரமாக குறைக்கப்பட்டது. நடப்பாண்டில் மார்ச் மாதத்திலிருந்து 12 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த 12 மணி நேரத்தை 2 தவணைகளாக வழங்குகின்றனர். இதனால் பயிர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் செல்வதில் சிரமம் உள்ளது. எனவே 12 மணி நேர மின்சாரத்தை ஒரே தவணையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.