மகாராஷ்டிர அரசு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் 100 மதிப்பெண்களுக்கு 35 என்பது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்காளாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால், மகாராஷ்டிர அரசு அந்த மதிப்பெண்களை 20 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
அங்கு மாணவர்கள் 35 மதிப்பெண்கள் கூட எடுக்க முடியாமல் இருக்க காரணமாக, தேர்ச்சிபெறுவோர் விகிதம் குறைந்து இருக்கிறது. 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு மாணவர்கள் கல்வியை கைவிடுகிறார்கள். இதனை சரிசெய்ய 10 ஆம் வகுப்புக்கான கணிதம் மற்றும் அறிவியல் தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.