ராகேஷ் ஜுன்ஜுவாலாவின் மனைவி ரேகா ஜூன்ஜுவாலா, இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார். குறிப்பாக, டைட்டன் குழுமத்தின் முக்கிய பங்குதாரராக அங்கம் வகிக்கிறார். இந்த சூழலில், டைட்டன் பங்குகள் இன்று 5% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால், அவருக்கு 800 கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டைட்டன் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதன் எதிரொலியாக வீழ்ச்சி அடைந்த டைட்டன் பங்குகள், இன்று 3 லட்சம் கோடி சந்தை மதிப்பு இலக்கிலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது. டைட்டன் குழுமத்தில் ரேகா ஜூன்ஜுவாலா 5.35% பங்கு பங்களிப்பை கொண்டுள்ளார். இதன் மொத்த மதிப்பு 16792 கோடி ஆகும். இது 15986 கோடியாக சரிந்துள்ளது. எனவே, இன்றைய வர்த்தகத்தில் அவருக்கு 805 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.














