தமிழகத்தில் புயல் காரணமாக அரையாண்டு தேர்வு நடத்துவது ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிப்படைந்தனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் தண்ணீர் புகுந்து பொருள்கள் அனைத்தும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கனமழையின் காரணமாக அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். தற்போது இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் 13ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாணவர்களின் தேவையை கண்டறிந்து நாளை பாட புத்தகம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.