தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிப்பதற்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை போலீஸ் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகள் வெளியிட்டுள்ளது. அதில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இணங்க சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் தயார் செய்யப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கவும் வெடிக்கவும் பட வேண்டும். அதேபோல காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8:00 மணி வரையிலும் என்று இரண்டு மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து நாலு மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவிற்கு ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவும், பயன்படுத்தவும், விற்கவும் கூடாது. தடை செய்யப்பட்ட சீன தயாரிப்புகளை விற்கக்கூடாது. குடிசை பகுதிகளிலும் மாடி கட்டிடங்களில் ராக்கெட் போன்றவை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட 19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.