‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரக பகுதிகளில் ‘நமக்கு நாமே’ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்து 2021 – 22ம் ஆண்டு நிதியாண்டில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஊரக உள்ளாட்சித்துறையானது அரசாணை வெளியிட்டது. மொத்தமுள்ள 100 கோடி ரூபாயில், 50 கோடியானது முதற்கட்டமாக இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்தது. மீதமுள்ள 50 கோடியானது பணிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் பட்சத்தில் வெளியிப்பிடப்படும் . மேலும் ‘நமக்கு நாமே’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.