இன்று மதுரை மாவட்ட பூர்விக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி வைகை அணையின் மூலம் ஐந்து மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதன்பின் தமிழக அரசின் உத்தரவின் படி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக ஐந்து நாட்களில் 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு நான்கு நாட்களில் 376 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 400 கன அடி நீர் ஆற்றில் அதிகாரிகள் திறந்து வைத்தனர். மேலும் வைகை கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நீர் 27 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு திறக்கப்பட உள்ளது