பாராளுமன்ற சிறப்பு கூட்டம் வருகிற 18-ஆம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆனால் கூட்டத்தின் காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் இதன் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 18ஆம் தேதி சம்விதன் சபாவில் இருந்து பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால சாதனை, அனுபவம், நினைவுகள் ,கற்றவை குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்வு, தபால் நிலையம் மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா, பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கை பதிவு மசோதா தாக்கல் செய்யப்படும். பின்னர் எதிர் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம், சோனியா காந்தியின் கடிதம் எழுதும் நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும் என வெளியாகியுள்ளது.














