20 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை தாண்டும் முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் வரலாறு படைத்துள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2% வரை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. இன்றைய வர்த்தக நாளில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒரு பங்கு மதிப்பு 2957.8 ரூபாய் அளவில் இருந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு 1993881.61 கோடியாகவும் அதிலிருந்து பிரிந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் சந்தை மதிப்பு 170331.55 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ப்ளூம்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 109 பில்லியன் டாலர்கள் மதிப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 11 ஆம் இடத்தில் உள்ளார். மேலும், இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளார்.