ரிலையன்ஸ் நிறுவனம், 20000 கோடி ரூபாய் மதிப்பில் நிதி திரட்டும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது. இந்திய ரூபாயை அடிப்படையாகக் கொண்ட பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம் நிதி திரட்ட உள்ளதாக புளூம்பர்க் தெரிவித்துள்ளது.ரிலையன்ஸ் வெளியிடும் ரூபாய் பத்திரங்கள், 10 ஆண்டுகள் அவகாசம் கொண்டவை. இந்தியாவில், இந்திய ரூபாயை அடிப்படையாகக் கொண்டு நிதி திரட்டும் மிகப்பெரிய தொகையாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த நிதி திரட்டல் இருக்கும் என புளூம்பர்க் அறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.