டாடா ப்ளே நிறுவனத்தின் 30% பங்குகள் டிஸ்னி நிறுவனத்திடம் உள்ளது. இதனை வாங்குவதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள், தங்கள் இணைப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், டாடா ஸ்கை என்று முன்னால் அழைக்கப்பட்ட தற்போதைய டாடா ப்ளே நிறுவனத்தின் 30% பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒருவேளை டிஸ்னி உடன் இது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டால், டாடா குழுமத்திற்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கும் ஏற்படும் முதல் இணைப்பாக இது இருக்கும். இது இரு நிறுவனங்களுக்கும் சாதகமானதாக அமையும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், டாடா பிளே நிறுவனத்தில், டாடா சன்ஸ் 50.2% பங்குகளையும், வால்ட் டிஸ்னி 30% பங்குகளையும், தெமாசெக் 19.8% பங்குகளையும் கொண்டுள்ளன.