ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 3000 கோடி நிதியை ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு வழங்கியுள்ளது.
வரும் ஜூன் 6-ம் தேதி, ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அதிகபட்ச வைப்பு நிதியாக (maximum earnest money deposit) 3000 கோடியை ரிலையன்ஸ் ஜியோ வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு எந்த உரிமமும் புதுப்பிக்க வேண்டிய நிலையில் இல்லை. ஆனாலும் நிதி வழங்கி, போட்டியில் களமிறங்குகிறது. அதே சமயத்தில், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் உரிமங்கள் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்நிலையில், ஏர்டெல் 1050 கோடி, வோடபோன் 300 கோடி தந்துள்ளன. மொத்தம் 96317.65 கோடி ரூபாய் மதிப்புடைய 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காக மூன்று நிறுவனங்களும் போட்டியிடுகின்றன.