15000 ரூபாய்க்கு 4ஜி சிம் கார்டுடன் கூடிய குறைந்த விலை லேப்டாப்புகள் - ரிலையன்ஸ் ஜியோ

October 6, 2022

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், "ஜியோ புக்" என்ற பெயரில், குறைந்த விலை லேப்டாப் ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த லேப்டாப்பின் விலை 15000 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் ஜியோ ஓஎஸ் (JioOS) இயங்கு தளத்தில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், மைக்ரோசாப்ட்-ன் குறிப்பிட சில அம்சங்கள் இந்த லேப்டாப்பில் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த லேப்டாப்பில் 4ஜி சிம் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. குவால்கம் நிறுவனத்தின் செமி கண்டக்டர் […]

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், "ஜியோ புக்" என்ற பெயரில், குறைந்த விலை லேப்டாப் ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த லேப்டாப்பின் விலை 15000 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் ஜியோ ஓஎஸ் (JioOS) இயங்கு தளத்தில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், மைக்ரோசாப்ட்-ன் குறிப்பிட சில அம்சங்கள் இந்த லேப்டாப்பில் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த லேப்டாப்பில் 4ஜி சிம் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. குவால்கம் நிறுவனத்தின் செமி கண்டக்டர் பாகங்கள் உடன் இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் மற்றும் அரசாங்க ஸ்தாபனங்களில் மட்டும் இந்த லேப்டாப் பயன்பாட்டில் உள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள், இந்த லேப்டாப் பொது மக்களுக்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம், 4ஜி தொழில்நுட்பம் துவங்கும் காலத்தில், குறைந்த விலையில் 4ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன், இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகவும் திகழ்ந்தது. அந்த வரிசையில், தற்போது, ஜியோ நிறுவனம், 4ஜி லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனையில் கிடைத்த வரவேற்பு மற்றும் வெற்றி இந்த லேப்டாப் விற்பனையிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, டெல் மற்றும் எச்பி நிறுவனங்களின் லேப்டாப்கள் இந்திய விற்பனையில் முன்னணியில் உள்ளன. எனவே, ஜியோ புக் லேப்டாப்பிற்கு ஏசர், லெனோவா மற்றும் இந்தியாவின் லாவா போன்ற லேப்டாப்புகள் போட்டியாக திகழும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தில் இயங்கும் லேப்டாப்களுக்கே பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, ஜியோ ஓஎஸ் -ல் இயங்கும் புதிய லேப்டாப் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய சிறிது காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. ஜியோ ஸ்மார்ட்போனை போலவே இந்த லேப்டாப் உள்நாட்டிலேயே தயார் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 4ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன், லேப்டாப் ஆகியவற்றை தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu