இன்று டெல்லியில் தொடங்கப்பட்ட ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்’ நிகழ்வில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஸ்பேஸ் பைபர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அதிவேக இணைய சேவையை கொண்டு சேர்க்கும் பொருட்டு, செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதில் களமிறங்கியுள்ளது. குஜராத் கீர், சட்டீஸ்கர் கோர்பா, ஒடிசா நபரங்பூர், அசாம் ஓஎன்ஜிசி ஆகிய பகுதிகளில் ஜியோ ஸ்பேஸ் பைபர் சேவை கொடுக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்படி, முதல் முறையாக அதிவேக இணைய சேவையை பல்வேறு இந்திய கிராமங்கள் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.