அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் 3 நாட்களாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. கிட்டத்தட்ட 14% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், தொடர்ந்து 3 வது நாளாக 5% லோயர் சர்க்யூட் விளிம்பை தாண்டி சரிவு பதிவாகியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் ₹31.10 ஆக பங்கு மதிப்பு உள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிதி மோசடி தொடர்பாக அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது. இந்த செய்தியின் விளைவாக ரிலையன்ஸ் பவர் பங்குகள் சரிந்து வருகிறது. ரிலையன்ஸ் பவர் தவிர, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகளும் 5% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன.