அதானி பவர் தனது 600 மெகாவாட் புட்டிபோரி அனல் ஆலையை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், ரிலையன்ஸ் பவரின் பங்குகள் கடந்த நான்கு வர்த்தக நாட்களில் 21.5% உயர்ந்து புதன்கிழமை ₹36.17 என்ற உச்சத்தை எட்டியுள்ளது.
குறிப்பிட்ட இந்த ஆலை விதர்பா இண்டஸ்ட்ரீஸ் பவர் நிறுவனத்திற்கு சொந்தமானது. தற்போது இது செயல்படாமல் உள்ளது. CFM அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் இந்த ஆலையின் கடனை ₹1,265 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்நிலையில், அதானி குழுமத்தின் உள் வருவாயின் மூலம், ₹2,400 கோடி முதல் ₹3,000 கோடி வரை (அதாவது ஒவ்வொரு மெகாவாட்டுக்கும் ₹4-5 கோடி) மதிப்புடைய இந்த ஒப்பந்தத்திற்கான நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த செய்தியின் விளைவாக ரிலையன்ஸ் பவர் பங்குகள் உயர்ந்துள்ளன.