ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தின் 100% பங்குகளை பெறும் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது. சுமார் 2850 கோடி ரொக்கப் பணத்திற்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், மெட்ரோ நிறுவனத்தின் விற்பனையகங்களை கையாள ரிலையன்ஸ் குழுமத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனால், எண்ணற்ற சில்லறை வணிகர்களுடன் தொடர்பு ஏற்படுவதுடன், விநியோக சங்கிலி பலப்படுத்தப்படுகிறது. இது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் சாதகமாக பார்க்கப்படுவதாக, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இஷா அம்பானி தெரிவித்துள்ளார். மெட்ரோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஸ்டீபன் குரூபல், “சரியான நேரத்தில் சரியான வர்த்தக நிறுவனத்திடம் மெட்ரோவை ஒப்படைத்ததில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.