ஜெர்மனியை சேர்ந்த மெட்ரோ ஏஜி (Metro AG) நிறுவனத்தின் மொத்த விற்பனை பிரிவான மெட்ரோ கேஷ் அண்ட் கேரி-யை (Metro Cash and Carry) விலைக்கு வாங்குவதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதிதாக பல்வேறு துறைகளில் தொழிலை விரிவாக்கம் செய்து வருகிறது. அதற்கு முதற்படியாக கேம்பா கோலா (campa cola) நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கியது. அந்த வரிசையில் ஜெர்மனியை சேர்ந்த மெட்ரோ ஏஜி நிறுவனத்தின் மொத்த விற்பனை பிரிவை விலைக்கு வாங்குவதற்கு தாய்லாந்தை சேர்ந்த Chareon Pokphand குழுமமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், Chareon Pokphand நிறுவனம் பேச்சுவார்த்தையை கைவிட்டுவிட்டதாக தொழிலக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அதனால் தற்போது மெட்ரோ ஏஜி நிறுவனத்தின் மொத்த விற்பனை பிரிவை விலைக்கு வாங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் பேச்சுவார்த்தை நடத்திவ௫வதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இது குறித்து அடுத்த மாதம் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ஏஜி நிறுவனத்தின் மொத்த விற்பனை பிரிவின் மதிப்பு சுமார் 100 கோடி முதல் 120 கோடி டாலர் என கூறப்படுகிறது. 2003ஆம் ஆண்டில் இந்தியாவில் நுழைந்த மெட்ரோ ஏஜிக்கு தற்போது 31 மொத்த விற்பனை ஸ்டோர்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.